ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றாரியோவின் மார்க்கம் பகுதியில் அமைந்துள்ள ஆசிய உணவகத்தில் சாப்பிட்ட பலர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மார்க்கம் பகுதியில் delight restaurant & bbq உணவகத்தில் சாப்பிட்ட சுமார் 12 பேர் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் மருத்துவ உதவியை நாடியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த சூழலில் யார்க் பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் பேரி பேக்ஸ் பற்றிய சம்பவம் தொடர்பில் புதிய சில தகவல்கள் பகிர்ந்து கொண்டிருக்கின்றார். அதில் பல்வேறு மூலிகைகள் அல்லது வேர்கள் அல்லது குறிப்பாக பூ வில் காணப்படும் ஒருவகை நச்சுப்பொருளான அகோனைட் எனப்படும் ஒன்று என்று சந்தேகிப்பதாக மருத்துவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் தங்களின் சந்தேகத்தை உறுதி செய்யும் நோக்கத்தில் பரிசோதனைகள் தீவிர படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
அதாவது குறித்த நச்சு பொருள் திட்டமிடப்பட்டு உணவில் கலந்து இருக்கலாம் அல்லது தவறுதலாக நடந்திருக்கலாம் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் சந்தேகத்திற்குரிய விஷம் வேண்டும் என உணவில் கலந்து இருக்கின்றனர் என நம்புவதற்கு இந்த நேரத்தில் எந்த காரணமும் இல்லை என அவர் தெரிவித்திருக்கிறார். அகோநைட் நச்சுப் பொருளானது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டிருக்கிற டாக்டர் பேரி பைக்ஸ் இதனால் வயிற்றுப்போக்கு, வலிப்பு அல்லது அரித்மியா ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு குறித்த உணவகம் ஒத்துழைப்பு தருவதாகவும் கடந்த மே மாதத்தில் உணவகமானது சுகாதார பரிசோதனையில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
Post Views:
0