“சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டர்”…. பிடிவாரண்ட் பிறப்பித்து நாமக்கல் கோர்ட் உத்தரவு….!!!!!


விபத்து வழக்கில் சாட்சி சொல்ல வராத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நாமக்கல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கின்றது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சென்ற 2019 ஆம் வருடம் பொன்நகர் பகுதியில் சாலை கடக்க முயன்ற பொழுது தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் உயிரிழந்து விட்டார்.

இவ்விபத்து குறித்து அப்பொழுது நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றிய செல்வராஜ் என்பவர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கானது குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் செல்வராஜூக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சி சொல்ல நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் சாட்சி சொல்ல வரவில்லை. இதனால் நேற்று செல்வராஜிற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.