தொடர்ந்து பெய்த கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!


வீடு இடிந்து விழுந்ததால் முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ரங்கப்பன் கொட்டாய் கிராமத்தில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் கனமழை பெய்ததால் துரைசாமியின் வீடு சரிந்து விழுந்தது. இதனால் காயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழமையான வீடுகள் இடிந்து வருவதால் வருவாய்த் துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

The post தொடர்ந்து பெய்த கனமழை…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.