“தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுன்”…. போலீசார் வலைவீச்சு…!!!!


தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுனை விரைவில் கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக போலீசார் கூறியுள்ளனர்.

பட்டியலினத்தவர்கள் பற்றி இணையத்தில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக நடிகை மீரா மிதுன் மற்றும் அவரின் நண்பர் ஷாம் அபிஷேக் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்கள். இதையடுத்து அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றது.

இந்த வழக்கமானது சென்ற 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் மீரா மிதுன் ஆஜராகாமல் அவரின் நண்பர் மட்டும் ஆஜரானார். இதனால் நீதிபதி நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாதபடி கைது வாரண்ட் பிறப்பித்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்பொழுது போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது, மீரா மிதுனை தேடி வருவதாகவும் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் விரைவில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதாகவும் கூறினார்கள். இதனால் நீதிபதி செப்டம்பர் 14ஆம் தேதிக்கு இந்த வழக்கை தள்ளி வைத்தார்.

The post “தலைமறைவாக இருக்கும் நடிகை மீரா மிதுன்”…. போலீசார் வலைவீச்சு…!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.