தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் அனேகமான இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் தொடர் கனமழை காரணமாக ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் விடுமுறை அறிவித்துள்ளார்.
Post Views:
0