சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறி சென்ற மாணவர்…. பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!


12-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சதாசிவபுரம் கிழக்கு காட்டு கொட்டகை பகுதியில் மகுடப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கிரிநாத்(17) என்ற மகனும், ஷர்மிளா(15) என்ற மகளும் இருக்கின்றனர். இதில் காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கிரிநாத் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு கிரிநாத் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து பள்ளி வளாகத்தில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் கிரிநாத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.