“உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி”…. ஆசிரியர்கள் பாராட்டு…!!!!!


மண்டல அளவில் நடைபெற்ற கால்பந்து மற்றும் கைப்பந்து போட்டியில் வால்பாறை உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் இருக்கும் அரசு பள்ளிக்கள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான மண்டல அளவில் கோட்டூரில் பல்வேறு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் வால்பாறை எம்ஜிஆர் நகரில் இருக்கும் மலைவாழ் கிராம மக்களின் குழந்தைகள் தங்கி படிக்கும் உண்டு உறைவிட பள்ளி மாணவி கவிசிரி பங்கேற்ற கால்பந்து அணி முதலிடம் பெற்றுள்ளது.

மேலும் கைப்பந்து போட்டியிலும் உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றார்கள். இவர்களை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ மாணவிகள் பாராட்டினார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.