உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடத்தில் நேற்றிரவு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரும் திருமண நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக மூழ்கி இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் சிக்கி ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இரண்டு பெண்களும், மூன்று குழந்தைகளும் பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஐந்து தீயணைப்பு வாகனங்கள், சில மணி நேர போராட்டங்களுக்கு மத்தியில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. மேலும் தீயில் சிக்கிய 7 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
The post அடக்கடவுளே…!திருமண நிகழ்ச்சியில் திடீர் தீ…. குழந்தைகள் உட்பட 5 பேர்…. தீயில் கருகி பலி….!!!! appeared first on Seithi Solai.