“தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம்”…. தொழிலாளர்கள் பீதி….!!!!!!


பந்தலூர் அருகே காட்டு யானை தேயிலைத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்ததால் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே இருக்கும் இரும்புபாலம் பகுதியில் நேற்று முன்தினம் காட்டு யானை புகுந்து அட்டகாசம் செய்தது. அப்போது அந்த யானை பந்தலூர் அரசு மருத்துவமனை அருகே நோயாளிகளை ஏற்றுச் சென்ற 108 ஆம்புலன்ஸை நடுவழியில் மறித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனசரகர் அங்கு சென்று காட்டு யானையை விரட்டி அடித்தார்கள்.

இதனால் ஆவேசம் அடைந்த காட்டு யானை இரும்புபாலம் பொதுமக்கள் குடியிருப்பை முற்றுகையிட்டது. பின் அங்குள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. இதனால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பீதி அடைந்தார்கள். பின் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.