பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடியம் பழைய காலணியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய்(18) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த சஞ்சயை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து சஞ்சய் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சஞ்சயை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தவர்கள் சஞ்சய் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post மகனை கண்டித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!! appeared first on Seithi Solai.