ரயில் பயணிகளே….. 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!!


முன்பதிவு இல்லாத பயணிகள் அனைவரும் பயன் பெறும் விதமாக 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் முன்பதிவு இல்லாத பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த பயணிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் தேர்வு செய்யப்பட்ட 24 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த ரயில்களின் தளத்தில் ஒரு பகுதியில் மட்டும் சில பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இயக்கப்படும்.

அதன்படி சென்னை சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம் மங்களூர், எழும்பூர் – கேரளா மாநிலம் கொல்லம், எழும்பூர் – ராமேஸ்வரம், ராமேஸ்வரம் – எழும்பூர், துாத்துக்குடி – கர்காடகா மாநிலம் மைசூர், சென்ட்ரல் – நாகர்கோவில் உள்ளிட்ட விரைவு ரயில்களில், ஓரிரு பெட்டிகள் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.