நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறிய குடும்பத்தினர்…!!


தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கண்ணசந்திரம் கிராமத்தில் அப்போஜியப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ் குமார்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மனோஜ் குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மனோஜ் குமார் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர் அதற்குள் மனோஜ் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டனர். பின்னர் மனோஜ் குமாரின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.