தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் இனி…. புதிய படிப்பு அறிமுகம்…. அரசு முக்கிய அறிவிப்பு….!!!!


தமிழகத்தில் உள்ள கலை,அறிவியல் மற்றும் பொலியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் நான் முதல்வன் விருப்ப தேர்வை எழுத வேண்டும் என கட்டாயமாகப்பட்டது.தற்போது மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தான் திறன் சார்ந்த படிப்புகளை பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே திறன் சார்ந்த படிப்புகளை கற்றுக் கொள்ளும்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் திறன் சார்ந்த படிப்புகளாக பிளாக் செயின், செயற்கை நுண்ணறிவு, ஐஓடி,இயந்திர பதிக்கற்றல் மற்றும் உற்பத்தியில் ரோபோடிக் சிமுலேட்டின் உள்ளிட்ட பாடங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு கேமிங் மற்றும் அனிமேஷன், மீடியா மற்றும் ஜர்னலிசம்,கேப்பிடல் மார்க்கெட் மற்றும் பைனான்ஸ் மார்க்கெட் சொல்லிட்ட பாடங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த திறன் சார்ந்த படிப்புகள் அனைத்தும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இணையதள முகவரியில் உள்ள நான் முதல்வன் என்கின்ற பகுதியில் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.