வெளியே சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!


காணாமல் போன இன்ஜினியரிங் மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலை கணேசபுரம் புது தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா(20) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் பிருந்தாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் கிருஷ்ணமூர்த்தி பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பிருந்தாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.