கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்த சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வெங்கங்குடி புது தெருவில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடை பாலம் அருகே கண்ணன் நடந்து சென்றுள்ளார். அப்போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் கண்ணன் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கண்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் கண்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய பாஸ்கர் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0