“விவேக்கின் ஆசையை நிறைவேற்றிய தனுஷ்”…. ரசிகர்கள் கருத்து…!!!!!


நடிகர் விவேக்கின் ஆசையை 10 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் நிறைவேற்றியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, மித்திரனின் திருச்சிற்றம்பலம் போன்ற படங்களை மிகவும் நம்பி இருக்கின்றார் தனுஷ்.

இந்த நிலையில் யாரடி நீ மோகினி எனும் வெற்றி படத்தை இயக்கிய மித்ரன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் மூலமாக ஏழு வருடங்கள் கழித்து அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து இருக்கின்றார்கள். இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த  இந்த படம் சென்ற ஜூலை 18-ம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்கின்றது. சமீபத்தில் வெளியான இப்படம் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்க்கும் படி அமைந்து வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது.

இந்த நிலையில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் சில வருடங்களுக்கு முன்பாக இயக்குனர் மித்ரன் பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியுள்ளதாவது, இயக்குனர் மித்ரன் நல்ல திறமையான இயக்குனர். நிறைய படங்கள் இயக்க வேண்டும். தனுஷ் அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த இந்த நேர்காணலில் விவேக் கூறியதைப் போல தற்பொழுது திருச்சிற்றம்பலம் படம் மூலம் தனுஷ் மீண்டும் மித்ரனுக்கு வாய்ப்பளித்திருக்கின்றார். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் விவேக்கின் ஆசையை தனுஷ் நிறைவேற்றி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.