ரேஷன் கடை ஊழியர் கழுத்தை அறுத்து கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள மாளிகைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் திலீப்குமார்(58). இவர் முத்தாண்டிக் குப்பம் வல்லம் கிராமத்திலுள்ள ரேஷன்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு அஞ்சலை தேவி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நேற்றிரவு திலீப்குமார் இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக வீட்டை விட்டு வெளியே சென்றார். இதையடுத்து நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திலீப்குமாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். எனினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது கரும்பு தோட்டத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் திலீப்குமார் சடலமாக கிடந்தார். இதனைப் பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இது தொடர்பாக தகவலறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், ராஜதாமரை பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திலீப்குமாரின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திலீப்குமாரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்துக் கொன்றதும், கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயங்களை மறைக்க கொலையாளிகள் மிளகாய் பொடியை தூவிச்சென்றதும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனினும் அவரை கொலை செய்தவர்கள் யார்..? எதற்காக கொலை செய்தார்கள்..? என்ற விவரம் தெரியவில்லை.

அதன்பின் திலீப்குமாரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இது பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திலீப்குமாரை முன் விரோதம் காரணமாக யாரேனும் கழுத்தை அறுத்துக்கொலை செய்தார்களா..? அல்லது வேறு ஏதாவது காரணமா..? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க 3 தனிப் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.