மணல் கடத்திய ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காரைக்காடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவிரி ஆற்றில் இருந்து 7 மணல் முட்டைகளை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்தி விசாரணையில் ஆட்டோ ஓட்டுநர் அரசலூரில் வசிக்கும் கோவிந்தன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தனை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post சட்டவிரோதமான செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை…!! appeared first on Seithi Solai.