காதலியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூர் இளங்கோ தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரும் சட்டக் கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அந்த மாணவி சக்திவேலுடன் பேசாமல் இருந்துள்ளார்.
இதில் கோபமடைந்த சக்திவேல் மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் காதலியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0