கணவன் மனைவியை தாக்கிய குற்றத்திற்காக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பள்ளப்பட்டி முருகன் காலணியில் கணேசன்- முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கணேசனும், முனியம்மாளும் வீட்டிற்கு முன்பு அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அங்கு வந்த மகேந்திரன் கணவன் மனைவி ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த முனியம்மாள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கப்பதிவு செய்த போலீசார் மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0