நடுரோட்டில் ஆசிரியை….. தீ வைத்து கொளுத்திய கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்….!!!!


ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் வைத்து மானபங்க படுத்தியது.

மேலும் ஊரார் முன்னிலையில் கடுமையாக தாக்கி அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது. ஆனால் உள்ளூர்வாசிகள் யாரும் இதை தடுக்காமல் உயிருடன் எரிக்கப்படும் அந்த பெண்ணை வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். பின்பு 70% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தார். முதல் கட்ட தகவலின் படி பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கடன் வாங்கியதாகவும், சிறிது காலமாக அதைத் திருப்பிக் கொடுக்காததால் இந்த நிலைமை நேர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.