ஸ்பெயினில் பறக்கும் காதல் புறாக்கள்…. முத்தத்தை பறக்க விட்ட நயன்


நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.  திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற இவர்கள், தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று முன் தினம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்பெயின் நாட்டில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கையில் தேசிய கொடியை பிடித்தபடி கொண்டாடினர்.அங்கு இருவரும் ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அங்குள்ள புகழ்பெற்ற இடங்களில் சுற்றி பார்க்கும் அவர்கள் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இருவரும் தூரத்திலிருந்து முத்தத்தை பறக்க விடும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அவர்கள் பின்னால் முத்தத்தை பரிமாறிக் கொள்ளும் சுவர் ஒன்று உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.