“அரிசிக்கு வரி என்பது கொடுமையானது”….. வணிகர் சங்கங்களின் தலைவர் குற்றச்சாட்டு…!!!!


அரிசிக்கு வரி என்பது மிகவும் கொடுமையானது என்று வணிகர் சங்கத்தின் பேரவை தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் தா வெள்ளையன் பேசியதாவது: “புகையிலைப் பொருட்களை விற்கும் வியாபாரிகளை நாங்கள் வியாபாரிகளாக ஏற்பது கிடையாது. அப்படி விற்பனை எதுவும் நடைபெற்றால் அதை தடுப்பதற்கு வணிகர் சங்கம் முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

அரசுக்கு வரி காலகாலமாக இல்லாமல் இருந்தது. ஆனால் மின்கட்டண உயர்வு , சொத்துவரி உயர்வு, சமையல் எரிவாயு உயர்வு போன்றவற்றை போன்று தற்போது அரிசிக்கும் வரி என்பது மிகவும் கொடுமையானது. மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டு செயல்படுகின்றது. மக்களை ஏமாற்றி வருகிறது. இது தொடர்பாக விரைவில் காந்திய வழியில் தீவிர போராட்டம் வணிகர் சங்கம் சார்பாக விரைவில் நடைபெறும் என்று வெள்ளையின் அறிவித்துள்ளார்.

The post “அரிசிக்கு வரி என்பது கொடுமையானது”….. வணிகர் சங்கங்களின் தலைவர் குற்றச்சாட்டு…!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.