கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா….. தலைமையில் விதை பந்துகள் வீசிய பள்ளி மாணவர்கள்……!!!!


நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகில் உள்ள செவ்வந்திப்பட்டி ஊராட்சியில் உள்ள மலைப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கிக் கொண்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவி மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு 4 வது ஆண்டாக தலைமலை அடிவாரம் மற்றும் தலைமலையில் விதை பந்துகள் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் 2000க்கும் மேற்பட்ட விதை பந்துகள் வீசப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு 1000 விதை பந்துகள் மட்டுமே வீசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.