“சுதந்திர நாளை முன்னிட்டு”…. கூகுள் வெளியிட்ட கவன ஈர்ப்புச் சித்திரம்….!!!!!


நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு இருக்கிறது.

பிரபல நிறுவனமான கூகுள் சிறப்பு தினங்களில் கவனஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்து வருகிறது. அந்த அடிப்படையில் இன்று நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சிறப்பு கவனஈர்ப்புச் சித்திரத்தை கூகுள் வெளியிட்டு உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த நீதி என்பவர் இதை வடிவமைத்துள்ளார். இந்தியாவின் கலாசாரத்தை சித்தரிக்கும் விதமாக, அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது போல வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. சுதந்திரத்தின் வெளிப்பாடாக கவனஈர்ப்புச் சித்திரத்தில் பட்டம் இடம் பெற்றுள்ளது. நாட்டின் சுதந்திரநாள் இன்று நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.