தேசியக்கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி பலி…. பெரும் சோகம்…!!!!


மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் மூவர்ணக் கொடியை ஏற்றிக் கொண்டிருந்த நபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோக சம்பவம் பர்வாஹா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நர்மதா சாலை பகுதியில் நேற்று மாலை நடந்தது. மோகன் படேல் என்ற 45 வயது நபர், நேற்று தன் கடையில் ஒரு இரும்பு கம்பியில் தேசியக் கொடியை ஏற்றியபோது அந்த கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்த மின் இணைப்பு கம்பியில், இந்த இரும்பு கம்பி தொடர்பு கொண்டது. அதில் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தேசியக்கொடி ஏற்றியபோது மின்சாரம் தாக்கி பலி…. பெரும் சோகம்…!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.