மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையை கடக்கும் முயன்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கண்ணுடையாள்புரத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிபிராஜ்(19) என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் சிபிராஜ் மோட்டார் சைக்கிளில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சமயநல்லூர் அருகே சாலையை கடக்க முயன்ற சுந்தர்ராஜன் என்பவர் மீது சிபிராஜின் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்த படுகாயமடைந்த சிபிராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views:
0