நெருங்கும் ஓணம் பண்டிகை…. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு ..!!!!


ஓணம் பண்டிகை முன்னிட்டு சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி கூறியது, எர்ணாகுளம்- சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் வருகின்ற செப்டம்பர்  1-ந் தேதியும், மறு மார்க்கத்தில் சென்னை சென்டிரல்- எர்ணாகுளம் சிறப்பு ரெயில் வருகிற 2-ந் தேதியும், மேலும் தாம்பரம் -மங்களூர் சிறப்பு ரெயியில் வருகிற 2-ந் தேதியும், மங்களூர்- தாம்பரம் சிறப்பு ரெயில் வருகிற 3-ந் தேதியும், தாம்பரம் -கொச்சுவேலி சிறப்பு ரெயில் வருகிற 4-ந் தேதியும், கொச்சுவேலி- தாம்பரம் சிறப்பு ரெயில்  வருகிற 5-ந் தேதியும் இயக்கப்படுகிறது.

இதனையடுத்து நாகர்கோவில் -சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் வருகின்ற செப்டம்பர்  11-ந் தேதி நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம், கொல்லம், கோட்டையம், எர்ணாகுளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர் வழியாக மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post நெருங்கும் ஓணம் பண்டிகை…. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு ..!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.