ஆகஸ்ட் 15 ஆம் தேதி கிராமசபை கூட்டம் நடைபெறும்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!


தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் 2022-23ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அறிவித்துள்ளது. இதில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.