தமிழகத்தில் முதல்முறையாக…. இன்று(ஆகஸ்ட் 13) முதல் 3 நாட்களுக்கு…. சர்வதேச பட்டம் விடும் திருவிழா…..!!!!!


தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா சென்னை அருகே மாமல்லபுரத்தில்  ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது . அமெரிக்கா,தாய்லாந்து மற்றும் மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 100 குழுக்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்த திருவிழாவில் பலூன் வடிவில் இருக்கும் பல்வேறு விலங்குகள்,மீன்கள் மற்றும் பறவைகள் வடிவிலான பட்டங்கள் பறக்க விடப்பட உள்ளது. அதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக விற்கப்படும்.வெளிநாடுகளில் ஆண்டுதோறும் கொண்டாடப்படக்கூடிய இந்த திருவிழா இந்தியாவில் குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக தமிழகத்தில் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.