நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பலவித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக அனைத்து பொதுமக்களும் வரும் ஆகஸ்ட் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் இந்திய தபால் துறை மூலம் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலமாக இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “தபால் துறை அதன் 1.5 லட்சம் அலுவலகங்களின் நெட்வொர்க் மூலமாக ஒவ்வொரு குடிமகனிடம் தேசியக் கொடிகளை கொண்டு போய் சேர்த்துள்ளது. 10 நாட்களுக்குள் ஆன்லைன் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாக இந்திய தபால் துறை ஒரு கோடிக்கும் அதிகமான தேசிய கொடியை விற்பனை செய்துள்ளது. இந்த கொடிகள் ரூபாய் 25க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஆன்லைன் மூலம் இதுவரை 1.75 லட்சம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொதுமக்களுக்கு தேசிய கொடிகளை கொண்டு செல்வது எங்களின் இலக்கு. இதற்கு எங்கள் 4.2 லட்சம் தபால் ஊழியர்கள் உதவி செய்கிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views:
0