சென்னை மக்களே….! இன்று முதல் 3 நாட்களுக்கு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!


சென்னை தீவு திடலில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக மூன்று நாட்கள் உணவுத் திருவிழா நடத்தப்பட உள்ளது.

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் இன்று சென்னை தீவுத்திடலில் உணவு திருவிழா தொடங்குகிறது. ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகள் நடைபெறும் என்றும், இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் உணவு வீணாவதை தடுப்பதற்கு எடுக்க வேண்டிய வழிமுறைகள், எந்த வகை உணவுகளை சாப்பிட்டால் நல்லது உள்ளிட்ட பல தகவல்கள் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரம்பரிய உணவு வகைகள், உணவு சார்ந்த போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் இங்கு நடைபெறும். 14 ஆம் தேதி காலை 7 மணி அளவில் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற உள்ளது. இதில் திரை கலைஞர்கள், பிரபலங்கள் பலரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post சென்னை மக்களே….! இன்று முதல் 3 நாட்களுக்கு….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.