வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரி பகுதியில் சிவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இசக்கிமுத்து(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இசக்கிமுத்துவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இசக்கிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசக்கிமுத்துவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0