தென்னை நார் மீது உரசிய மின்கம்பி…. கொழுந்து விட்டு எரிந்த வேன்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!


தென்னைநார் மீது மின்சார கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூரிலிருந்து தென்னைநார் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று அக்கரைபாளையத்தில் இருந்து மூலனூர் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தென்னை நார் மீது மின்சாரக் கம்பி உரசியதால் வேன் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதனை அறிந்த டிரைவர் வேனை நிறுத்திவிட்டு இதுகுறித்து வெள்ளகோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.