2 மணி நேர இடைவெளியில்…. பெண்களுக்கு எதிரான 2 சம்பவங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!


லண்டன் நகரில் 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டதன் பின்னணி வெளியாகியுள்ளது.

கனடா நாட்டில் லண்டன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை சேர்ந்த இளம்பெண் கடந்த 2ஆம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த இளைஞர் அவரிடம் வந்தார். பின்னர் அந்த பெண்ணிடம் பேசிய இளைஞர் அவரை பிடித்து இழுத்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து தப்பியோடினார்.  அங்கிருந்து தப்பிப்பதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண் அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்த அடுத்த 2 மணி நேரத்தில் அதே பகுதியில் இதே போன்ற சம்பவம் டீன் ஏஜ் பெண் ஒருவருக்கும் நடந்துள்ளது. இந்த இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர் தான் ஈடுபட்டிருப்பார் என  காவல்துறையினர் கருதிய நிலையில் 22 வயதுடைய அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவல்துறையினர் வேறு எந்த தகவலையும்  வெளியிடவில்லை.

 

The post 2 மணி நேர இடைவெளியில்…. பெண்களுக்கு எதிரான 2 சம்பவங்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.