குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. மனைவிக்கு அரிவாள் வெட்டு…. கணவன் கைது….!!


மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள எஸ்.மறையூர் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதற்கிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் முனீஸ்வரி கோபித்து கொண்டு கடந்த மாதம் 14-ந் தேதி தூத்துக்குடி பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனையடுத்து முனீஸ்வரன் பல்லா குளத்திற்கு வந்து தகராறு செய்ததுடன், முனீஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த முனீஸ்வரியை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.