வாவ்…. பிரியாணி, கேக் வகைகளுடன் நாளை உணவு திருவிழா….. உடனே கிளம்புங்க….!!!!


திண்டுக்கல் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. மேலும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்படுக்கின்றது.இதனையடுத்து பி.வி.கே. திருமண மண்டபத்தில் நாளை காலை உணவு திருவிழா நடத்தப்பட உள்ளது.

இதில் திண்டுக்கல்லில் பிரபலமான பிரியாணி, கேக் வகைகள், பராம்பரிய உணவுகள் உள்ளிட்ட பல்வகை உணவுகள், செக்கு எண்ணெய் முதலானவை இடம்பெறுகின்றது. இதற்காக 45 அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் இலவசமாக உணவு தரத்தை சோதனை செய்தல், உணவு பாக்கெட் உரைகளை விதிகளின் படி திருத்தம் செய்தல் ஆகியவையும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் மாலையில் சிந்தனை பட்டிமன்றம் நடத்தப்படுகிறது. இதற்கு முன்னதாக காலையில் காந்திகிராமத்தில் மாணவிகள் பங்கேற்கும் நடைபயணம் நடத்தப்பட உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.