“கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் ஜான்செல்வராஜ்நகர் பூங்கா”…. மக்கள் கோரிக்கை….!!!!!


கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் பூங்காவை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் 26 வது வார்டு ஜான்செல்வராஜ்நகர் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமான பூங்கா இருக்கின்றது. இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இளைப்பாறவும் உடற்பயிற்சி செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றார்கள். மேலும் பள்ளி மாணவ-மாணவிகள் பூங்காவில் விளையாடி பொழுதை கழிப்பார்கள்.

இந்நிலையில் இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் பூங்காவை சுற்றி பல்வேறு குப்பைகள் சூழ்ந்து அசுத்தமாக காணப்படுகின்றது. மேலும் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகளை பூங்காவில் கொட்டுவதால் அங்கு வரும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுப் பரவும் அபாயம் இருக்கின்றது.

மேலும் பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்கள் பழுந்தடைந்திருப்பது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் குற்றவாளிகளை கண்டறிய முடியாத சூழ்நிலை இருக்கின்றது. இதுபற்றி வார்டு கவுன்சிலர் பிரதீபாவிடம் கேட்ட பொழுது, பூங்காவை பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். இதுபற்றி மாநகராட்சி அலுவலர்களிடம் கூறியிருக்கின்றேன். மேலும் பூங்கா பொலிவுடன் மீண்டும் மாற தேவையான நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.

The post “கும்பகோணத்தில் பராமரிப்பின்றி காணப்படும் ஜான்செல்வராஜ்நகர் பூங்கா”…. மக்கள் கோரிக்கை….!!!!! appeared first on Seithi Solai.

Leave a Reply

Your email address will not be published.