கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி…!!


மொபட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காசிம்புதுப்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மொபட்டில் வந்த நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் 17 கஞ்சா பாக்கெட்டுகளை மொபட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் குமரை கைது செய்ததோடு, அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.