வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் என்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புஷ்பவனம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினியரான கணேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் செம்போடை கடைத்தெருவிற்கு சென்று விட்டு புஷ்பவனம் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்தகாயமடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேதாரண்யம் காவல்துறையினர் கணேஷ் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. என்ஜினியருக்கு நடந்த விபரீதம்…. நாகையில் கோர விபத்து….!! appeared first on Seithi Solai.