“ரகுவரனுடன் நடித்த அனுபவம்”…. பகிர்ந்த தனுஷ்…. இணையத்தில் வைரல்…!!!!!


நடிகர் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பகிர்ந்தது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் ஏழாவது மனிதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ரகுவரன். இவர் ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் என தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தில் தனுஷுக்கு அப்பாவாக நடித்திருந்தார். ரகுவரன் உயிரிழந்து 15 நாட்களுக்குப் பிறகு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் இப்படத்தில் ரகுவரனுடன் நடித்த அனுபவம் குறித்து தனுஷ் பேசியது தற்பொழுது வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, ரகுவரனுடன் ஒரே ஃபிரேமில் நடித்தது பெரும் சவாலாக இருந்தது. ரகுவரன் நடிப்பில் மிரட்டுவார் என்பதால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தேன். மேலும் இத்திரைப்படத்தில் அப்பா-மகனாக தங்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது என கூறியுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.