இன்ஜினியரிங் படிப்புக்கான கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 440 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கு வருடம் தோறும் 1.5 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். கடந்த 27-ம் தேதியுடன் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப தேதி முடிவடைந்துள்ளது. இதுவரை 2,11,115 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
இந்நிலையில் இன்ஜினியரிங் கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதனையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்தவுடன் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இந்த பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டதால் இறுதிப்பட்டியல் வெளிய ஆவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. மேலும் கலந்தாய்வு முடிவடைந்த பிறகு கூடிய விரைவில் புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Views:
0