ஒரு வருடம் ஆகியும் வீட்டிற்கு வராத மனைவி…. மன வேதனையில் இருந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!


வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஆலங்கனேரி கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நவீன்குமாாின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நவீன் குமார் ஒரு வருடம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராததால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதனால் நவீன்குமார் திடீரென வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நவீன்குமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.