பிரபல நாட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்…. 6 குழந்தைகள் உள்ளிட்ட 24 பேர் பலி…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!


பாலஸ்தீனின் காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் தொடர்ந்து கடுமையான பாதிப்பும், உயிர் லிகளும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனின் அல்-குத்ஸ் படைப்பிரிவுடைய தளபதி அல்-ஜபரி காசாவில் நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அதாவது, பாலஸ்தீன் காசா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதளில் பாலஸ்தீன் போராளி குழுவின் உயர்மட்ட தளபதி உள்ளிட்ட 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு 5 வயது பெண் குழந்தை உள்ளிட்டு 6 குழந்தைகளும் அடக்கம் என்றும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை நடந்த தாக்குதல் சம்பவங்களில் 24 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் இஸ்ரேல் தரப்பு இதனை மறுத்துள்ளது. பாலஸ்தீனின் இஸ்லாமிய ஏவுகணை தாக்குதலில் தான் குழந்தைகள் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியது. இதனையடுத்து பாலஸ்தீனின் இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர்களின் ஒருவரை இந்த வார தொடக்கத்தில் கைது செய்த பிறகு அந்த அமைப்பின் அச்சுறுத்தல் வந்ததை தொடர்ந்து இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.