மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட நபர்கள்….. 14 பேருக்கு HIV தொற்று…. பெரும் அதிர்ச்சி….!!!!


மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு ஹச்ஐவி தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் வராகவான் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்ளிட்ட 14 பேர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பச்சை குத்தி கொண்டனர். அவர்களுக்கு தற்போது எச்ஐவி தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மலேரியா, காய்ச்சல் உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எச்ஐவி பரிசோதனையும் செய்யப்பட்டது.

அதில் தொற்று இருப்பது உறுதியானது, இவர்களில் ஒருவருக்கு கூட பாலியல் ரீதியான தொடர்பினாலோ அல்லது தொற்று ஏற்பட்டவரின் ரத்தம் வழியாகவோ பாதிப்பு ஏற்படவில்லை. சமீபத்தில் அவர்கள் பச்சை குத்தி கொண்டனர் என்பதே அவர்களுக்கு இடையேயான பொதுவான விஷயமாக பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு பச்சை குத்திய நபர் ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்திய உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. பச்சை குத்தும் ஊசியின் விலை அதிகம் என்பதால் பணத்தை மிச்சப்படுத்த ஒரே ஊசியை அனைவருக்கும் பயன்படுத்தியது விபரீதத்தை ஏற்படுத்தி உள்ளது.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.