“பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது”….. மத்திய மந்திரி எழுத்துப்பூர்வ பதில்….!!!!!!!!!!


கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து பள்ளிகளில் படித்து வந்த மாணவ மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து இருக்கின்றதா என பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர் தரப்பில் எழுத்துப் பூர்வ  கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு மந்திரி ஸ்மிருதி ராணி நாடு முழுவதும் உள்ள ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலைகளும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கிய தகவலின் படி ஆரம்பப்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் இடைநிற்றல்  விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.