ஓசூர் மற்றும் சூளகிரி பகுதிகளில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. மேலும் பாகலூர் ரோடு சர்க்கிள், ராயக்கோட்டை ரோடு சர்க்கிள் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஓசூர் பேருந்து நிலையத்தில் மழைநீர் புகுந்து தேங்கியது. இதேபோல ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாவது சிப்காட் பகுதியில் பிரபல தனியார் தொழிற்சாலையின் எதிரே உள்ள மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியது. கன மழையின் போது ஓசூர் ஜி ஆர் டி சர்க்கிள் அருகே வந்த முதியவர் ஒருவர் தடுமாறியவாறு அந்தப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் முதியவரை கால்வாயில் இருந்து மீட்டுள்ளனர்.
ஓசூர் அருகே கமலஹாசபுரம் கிராமத்தில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்திருப்பதால் மக்கள் அவைதடைந்து வருகின்றனர். மேலும் ஓசூரில் கனமழை தொடர்ந்து பரவலாகவும், விட்டுவிட்டும் இரவு வரை மழை பெய்தவாறு இருந்தது. சூளகிரி ஒன்றியம் அத்திமுகம் அருகே மிடுதே பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவ மாணவிகள் கடுமையாக அவதிப்பட்டு உள்ளனர். மேலும் வகுப்பறைக்குள் புகுந்த நீரை மாணவ மாணவிகளை வெளியேற்றி வகுப்பறையை சுத்தம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
Post Views:
0