தமிழகத்தில் இன்று பல இடங்களில்….. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. எங்கெல்லாம் தெரியுமா….????

தமிழகத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் தொடர் கனமழை பெய்துள்ளது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டார பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதே போல், கொடைக்கானலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமலை பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.