வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உப்பாரப்பட்டியில் வினோத்குமார்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வினோத்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் வினோத்குமாரின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்து வினோத்குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post Views:
0