பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி…. வாலிபர் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Views:
0

Leave a Reply

Your email address will not be published.